தாமரையின் ஊழல் முகம்
ம க்களின் அவநம்பிக்கையைப் பெறுவதற்கு காங்கிரஸுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுத்ததற்கும், அந்த வெறுப்பின் அறுவடையை பா.ஜ.க. பெற்றதற்கும் ஒரே காரணம்தான்... ஊழல். ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம், ராணுவ ஹெலிகாப்டர் கொள்முதல் என, காங்கிரஸ் ஆட்சியில் எங்கெங்கும் ஊழல்; எண்ணிடலங்கா ஊழல். அந்த நிலையை மாற்றுவோம் என்ற நம்பிக்கையை விதைத்துதான் மக்களின் வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை என்ற பிரமாண்ட வெற்றியைப் பெற்றது; மோடி சர்க்கார் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது நடப்பது என்ன? ஒவ்வொரு நாளும் ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும், சர்ச்சைகளும் சந்தி சிரிக்கின்றன. லலித் மோடி என்ற ஊழலின் நாயகனுக்கு உதவியது முதல், ஊழலோடு சேர்த்து உயிர்களையும் பலிவாங்கும் மத்தியபிரதேச மாநிலத்தின் ‘வியாபம்’ ஊழல் வரைக்கும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ச்சை. எதற்கும் பிரதமர் மோடி வாய் திறப்பது இல்லை. ‘யோகா செய்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கு...