இடுகைகள்

அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிமுகம் - ஆழியூரானாகிய நான்..!

படம்
பு ரசைவாக்கம் நெடுஞ்சாலை, நேரே சென்று முட்டுமிடத்தில் கெல்லீஸ் சிக்னல் இருக்கிறதில்லையா.. அதனருகிலிருக்கும் உயர்ந்த கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு பெரியவர் மெஸ் போல ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். கீழே ஊர்ந்து நகரும் வாகனங்களையும், அதில் அமர்ந்தபடி ஏதோவொரு காண்டம் விளம்பரத்தில் வருவதுபோல, காதலனின் காதுமடல் கடிக்கும் காதலியின் சில்மிஷங்களையும் ரசித்தபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த விநாடியொன்றில்தான் பாலபாரதி, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை சொன்னார். இணையம், பிளாக், தமிழ்மணம்... என்றெல்லாம் அவர் சொல்லியவை, ஏதோ வேற்றுகிரக மொழிபோலவே தோன்றியது. அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே திடீர், திடீரென்று செல்போனை காதில் வைத்தபடி டோண்டு, போலிடோண்டு, சூடுபறக்குது, அனல் அடிக்குது.. என்றெல்லாம் யாருடனாவது மணிக்கணக்கில் பேசப்போய்விடுவார். கேட்கும் நமக்குதான் ஒரு எழவும் புரியாது. திடீரென்று ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பின் வழியே சில தகவல்களைக் கேட்டுக்கொண்டு, சில நிமிடங்களில், 'இதுதான் உன் பிளாக்கின் முகவரி..' என்று அவர் சொன்னபோது, தனக்கான முதல் பா.க.ச...

வணக்கம்

படம்
`நடை வண்டி` என்ற தலைப்பைப் பார்த்திருப்பீர்கள்.அதன் கீழேயே`மரபு உடைக்க பழகு` என்ற எழுத்துகளும் இருக்கும்.இரண்டையும் பார்த்து விட்டு,`வந்துட்டாய்ங்கய்யா கோடரி தூக்கிக் கிட்டு.. மரபு உடைக்க`என்றோ,`மரபு உடைக்க பழகச் சொல்லிவிட்டு தமிழ் மரபின் அடையாளமான நடை வண்டியைத் தலைப்பாக்கியிருப்பது ஏன்..?`என்றோ நினைக்கலாம். நிற்க.வெயில் காலத்தில்`எவ்வளவு மழையா இருந்தாலும் சமாளிச்சுடலாம்..வெயில்தான் பெரியக் கொடுமை..`என்றும்,அடைமழை நேரத்தில் இதற்கு எதிர்மாறாகவும் பேசும்,முரண் சிந்தனை நமது சமூகத்தின் அடிநாதமானது.அதில் நானும் ஒருவன்.அப்படியான முரண் சிந்தனைகளை கூடி விவாதிக்கவும்,புதிய தளத்தில் நடந்து பழகவும்தான் இந்த நடைவண்டி. வண்டியோட்டியான நான்,தஞ்சாவூர்காரன்.வண்டல் மண்ணின் வாசனையோடு பெருநகரத்தில் வாழ்பவன் அல்லது பிழைப்பவன்.அப்புறமென்ன..? முடிந்தவரை அடிக்கடி பதிவு போட முயற்சிக்கிறேன்.