இடுகைகள்

இந்து கடவுளுக்கு மட்டு்ம் சலுகை ஏன்..?

இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்கிறோம்.ஆனால் சில எதிர்பாராத தருணங்களில்தான் பல விஷயங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன. சமீபத்தில் வேலை நிமிர்த்தமாய் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றிவர வேண்டிய அவசியம ஏற்பட்டது.சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் போனேன்.(சத்தியமா வேலை விஷயமாதாங்க..)அப்போது நான் கவனித்த ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களின் முகப்பில் ஒரு இந்து கோயில் இருக்கிறது.ஒரு காவல் நிலையத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கலாம்.(பார்க்கிறார்கள்).அப்படியிருக்கும்போது ஒரு தனிப்பட்ட மதத்துக்கு மட்டும் வழிபாட்டுத் தளம் அமைத்திருப்பது ஏன்..?இறைபக்தி என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே..பிள்ளையாரை வழிபடும் நீங்கள் கோயில் கட்டிக்கொண்டால் கர்த்தரை வழிபடுவோரும்,அல்லாவை தொழுவோரும் எங்கே போவார்கள்..? எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி.அதை மீறி இப்படியெல்லாம் செய்யும்போது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..? அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடுப் பார்த்தால்தான் போலீஸ் ஸ்டேஷன்கள் எ...

லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?

வலைப்பூக்களில் அண்மை நாட்களாகவே லிவிங்ஸ்மைல் வித்யாவை குறிவைத்து மறைமுகமான தாக்குதல்கள் நடைபெற்றுவந்தன.அது இப்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது.`லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்` என்ற தலைப்பில்,செந்தழல் ரவி வெளியிட்டிருக்கும் பதிவில் அவரது முகம் மட்டுமே தென்படவில்லை.அவரை ஒத்த பலரின் `நாட்டுப்பற்று` முகமும் அதில் தெரிகிறது. "இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்.சக மனிதனை மனிதன் என்று கூட ஒத்துக்கொள்ளாத சாதி சகதியைப் பற்றி அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள் திருநங்கைகளுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.ஒடுக்கப்பட்ட தளத்தில், தலித்துகள் வாழ்வியல் காரணங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது,அதனோடு சேர்த்து தங்களின் பாலியல் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள். பேருந்தில் ஏறினால் நிலைகுத்திய பார்வையோடு உற்றுபார்ப்பது முதல், சாலையில் செல்லும்போது வெறித்து வெறித்துப் பார்த்து சங்கடப்படுத்துவது வரை திணசரி வாழ்க்கையில் அவர...

வணக்கம்

படம்
`நடை வண்டி` என்ற தலைப்பைப் பார்த்திருப்பீர்கள்.அதன் கீழேயே`மரபு உடைக்க பழகு` என்ற எழுத்துகளும் இருக்கும்.இரண்டையும் பார்த்து விட்டு,`வந்துட்டாய்ங்கய்யா கோடரி தூக்கிக் கிட்டு.. மரபு உடைக்க`என்றோ,`மரபு உடைக்க பழகச் சொல்லிவிட்டு தமிழ் மரபின் அடையாளமான நடை வண்டியைத் தலைப்பாக்கியிருப்பது ஏன்..?`என்றோ நினைக்கலாம். நிற்க.வெயில் காலத்தில்`எவ்வளவு மழையா இருந்தாலும் சமாளிச்சுடலாம்..வெயில்தான் பெரியக் கொடுமை..`என்றும்,அடைமழை நேரத்தில் இதற்கு எதிர்மாறாகவும் பேசும்,முரண் சிந்தனை நமது சமூகத்தின் அடிநாதமானது.அதில் நானும் ஒருவன்.அப்படியான முரண் சிந்தனைகளை கூடி விவாதிக்கவும்,புதிய தளத்தில் நடந்து பழகவும்தான் இந்த நடைவண்டி. வண்டியோட்டியான நான்,தஞ்சாவூர்காரன்.வண்டல் மண்ணின் வாசனையோடு பெருநகரத்தில் வாழ்பவன் அல்லது பிழைப்பவன்.அப்புறமென்ன..? முடிந்தவரை அடிக்கடி பதிவு போட முயற்சிக்கிறேன்.