வாத்திமார் வரலாறு....

ள்ளிக்கொடத்துல படிச்சதை நெனச்சுப் பார்க்குறது எல்லாருக்குமே சொகமான வெசயம்தான். அபிஅப்பா அவரு படிச்ச பழைய பள்ளிக்கொட வாத்திமார்களோட பேர்களையெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு பதிவு எழுதியிருக்காரு. அதைப்படிச்சதும் அவுத்துவிட்ட மாடு கணக்கா என் புத்தியும் எங்கூருக்கு ஓடிப்போச்சு.

தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை போற வழியில மேலஉளூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்குன எறங்கி மேற்கப் பாத்து மூணு கிலோமீட்டர் நடந்தா ஆழிவாய்க்கால்னு ஒரு ஊரு வரும். அதுதான் எங்க ஊரு. ஊருக்குள்ள உப்புக்கொளத்தான் கரையில தெக்குப்பார்த்தாப்ல இருக்குது எங்க பள்ளிக்கொடம். எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கு. மொத்தம் மூணு கட்டடம். அதுக்குள்ளாறதான் எட்டு கிளாஸ் பிள்ளைகளும் உக்காந்திக்கணும். ஏ,பி,சி,டி..ன்னு செக்ஷன் பிரிக்கிறது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரு வர்றது.. இந்த சோலியேக் கெடையாது. ஒரு கிளாஸ்தான்..ஒரே வாத்தியாருதான்.



மொதக்கிளாஸ் படிக்கும்போது ஆரம்பத்துல ஒரு ஆம்பளை வாத்தியார்தான் வந்தாரு. அப்புறமா கொஞ்ச நாள் செண்டு, ஜெயசித்ரான்னு ஒரத்தநாட்டுலேர்ந்து ஒரு புது டீச்சர் வந்தாங்க. அவங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கன்னங்கரேர்னு இருப்பாங்க. ஆனா, சூப்பரா எங்களுக்கு புரியற மாதிரி பாடம் சொல்லித்தருவாங்க. அதையெல்லாம் விட முக்கியமா,மித்த எல்லா வாத்தியாரும் பயலுகளைக் விட்டு கடையில டீ வாங்கியாரச் சொன்னா, பூரா டீயையும் அவய்ங்களே குடிச்சுத் தீர்த்திருவாய்ங்க. 'இவ்வளவு தூரம் போய் வாங்கிட்டு வந்திருக்கானே.. இத்திணிக் குடுப்போம்'னு கிடையாது. ஜெயசித்ரா டீச்சர் மட்டும்தான், வாங்கிட்டு வர்ற பையனுக்கும் டீ கொடுப்பாங்க.

அது மட்டுமில்ல.. மத்த வாத்தியார் டீ வாங்கிட்டு வரச்சொன்னா, நடந்துப்போய்தான் வாங்கியாரனும். ஜெயசித்ரா டீச்சர் மட்டும் அவங்களோட சின்ன சைக்கிளைக் கொடுத்து வாங்கியார சொல்லுவாங்க. அதனால, அவங்க டீ வாங்கியாரச் சொன்னா மட்டும் பசங்கப் போட்டிப் போடுவோம். ஆனா், இந்த டீச்சரையும் பிடிக்காத எவனோ கெரகம் பிடிச்சவன், 'ஜெயசித்ரா டீச்சருக்கும், முணியாண்டி சாருக்கும் லவ்' அப்படின்னு ஒண்ணுக்குப்போற கட்டையில கரிக்கட்டையால எழுதிட்டான். கொஞ்ச நாள் பரபரப்பா விசாரணையெல்லாம் நடந்துச்சு.

வெவரம் என்னன்னா, அந்த மூணாங்கிளாஸ் முணியாண்டி சார், பயங்கரமா அடிப்பார். மொரட்டு மீசையோட அவரைப் பார்க்கவே பயமா இருக்கும். இந்த முணியாண்டி வாத்தியாரு பக்கத்துல காட்டுக்குறிச்சிங்கிற ஊரைச்சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் பிள்ளைகளைக் கண்ணுமண்ணு தெரியாமப் போட்டு அடிக்கிறார்னு சொல்லி, எங்க ஊரு மைனருங்க பஞ்சாயத்துக்குப் போனாய்ங்க. கடைசியில, 'ஒரு ....பய எங்கப் பிள்ளைகளை எப்படி அடிக்கலாம்..?' அப்படின்னு வார்த்தையை ஓவராப்பேசி, அதுலேர்ந்து அவரு எந்தப்பயலையும் கை வைக்கிறதில்லை. அந்த ஜெயசித்ரா டீச்சர் இப்போ வேற ஊர் பள்ளிக்கொடத்துல வேலை பார்க்குறாங்க. முணியாண்டி வாத்தியாரு, உடம்பு சரியில்லாம செத்துப் போயிட்டாரு.

ரெண்டாங்கிளாஸ்லதான்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. நல்லா குண்டா, கண்ணாடிப் போட்டுகிட்டு, வெள்ளைக்காரியாட்டம் வரும். மொறையாப் பார்த்தா, அதோட கலருக்கு அந்த டீச்சருதான் கிராமத்துல மவுசா இருந்திருக்கனும். ஆனா, அது யார்கூடவும் தேவையில்லாம பேசாது. மேம்போக்கா போவும். அதனாலயே அதை யாருக்கும் ஊருக்குள்ளப் பிடிக்கலை.
இப்ப தஞ்சாவூர்ல வேலைப் பார்க்குதுன்னு பசங்க சொல்லிக்கிட்டாய்ங்க.

நாலாங்கிளாஸ் வாத்தியார் ராமையன் சார் ஒரு சோக சித்திரம். இடையில கொஞ்ச நாள் மண்டைக் கோளாறாயிப்போயி லீவுல இருந்தாரு. அப்படியும், எல்லா நேரமும் முழு மனநிலையோட இருப்பார்னு சொல்ல முடியாது. சரக்கு அடிக்காம ஒரு நாளும் பள்ளிக்கொடத்துக்கு வந்ததில்லை. அவர் ஒரு டி.ராஜேந்தர் ரசிகர். கிளாஸ்ரூம்ல, 'சலங்கையிட்டால் ஒரு மாது' அப்படின்னு அவர் பாடுறது இப்பக் கேக்குறது மாதிரி இருக்கு. போதையேறுன குரல்ல வெளிவர்ற வார்த்தைகள், கேக்குறவங்களை சொக்கிப்போக வைக்கும்.

திடீர், திடீர்னு கிறுக்குப் பிடிச்சுக்கும் அவருக்கு. ஒரு நாள், கிளஸ்ல கிடந்த சேர், நாற்காலி எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உடைக்கிறாரு. எல்லாரும் பயந்துப்போயி வெளிய ஓடியாந்தோம். பத்து நிமிஷம் போல எல்லாத்தையும் உடைச்சுட்டு, ஒரு பையனைக் கூப்பிட்டு, போய் டீ வாங்கிட்டு வரச்சொன்னாரு. அவன் திருப்பிக் கொண்டாந்துக் கொடுத்த பத்து ரூபாயை திருப்பி அவன்கிட்டயேக் கொடுத்து, 'எல்லாரும் மிட்டாய் வாங்கி திண்ணுங்க'னு சொன்னாரு. ஊருக்குள்ள பெரிய மனுஷய்ங்கல்லாம், 'லூசுப்பயலெல்லாம் வாத்தியாரா இருக்கான்'னு பேசி, மேலதிகாரிகளுக்கு இந்தாளை மாத்தனும்னு புகாரெல்லாம் அனுப்புனாய்ங்க. அவய்ங்க கெட்ட நேரம்.. அதிகாரிக வரும்போது அவரு நல்லவிதமா இருப்பாரு.

பருத்தியப்பர் கோயில், பங்குனி உத்தர திருவிழாவுக்குப் போவும்போது, அவர் வீட்டுலதான் எல்லாரும் தண்ணிக் குடிப்போம். அங்கதான் செருப்பை கழட்டிப்போடுவோம். அவரோட வீட்டம்மா அவ்வளவு நல்லாப் பேசுவாங்க. அவரோட பையனும் எங்கக்கூடவேதான் படிச்சான். மூணு வருஷத்துக்கு முன்னாடி ஊருக்குப் போயிருக்கும்போது,'சக்கரவர்த்தி(ராமையன் சாரின் மகன்) செத்துப் போயிட்டான் மாப்ள'ன்னு பசங்க சொன்னாங்க. காதல் தோல்வியாம். மருந்துக் குடிச்சு செத்துப் போயிட்டானாம். ரிட்டையர் ஆகி வீட்டுல இருந்த ராமையன் சார், சில நாட்களுக்கு முன்னாடி தற்கொலை செஞ்சு இறந்துட்டாராம். கேள்விப்பட்டப்போ, மனசுக் கனத்துப்போச்சு.
.
.
.
.
.
.

அஞ்சாங்கிளாஸ் வாத்தியார் வடிவேல் சார் நல்ல மனுஷன். பசங்க யாருக்கும் பரிச்சைக்குக் கட்ட காசு இல்லைன்னா அவரேக் கட்டுவார். ஒரு கட்டுரைப் போட்டுக்காகப் போகும்போது, ஒரத்தநாட்டுல இருக்குற அவரோட வீட்டுக்குப் போனேன். அவரோட வீட்டம்மா, என் தலையெல்லாம் பரட்டையா இருக்குன்னு, தலையிலேர்ந்து கால் வரைக்கும் எண்ணெய் தேய்ச்சு விட்டது இப்பவும் ஞாபகம் இருக்கு. இவர், நான் ப்ளஸ் டூ முடிக்கிறதுக்கு முந்தியே ரிட்டையர் ஆயிட்டார். போன வருஷம் ஹார்ட் அட்டாக்ல இறந்து போயிட்டதா நண்பர்கள் சொன்னாங்க.

ஆறாம்கிளாஸ் வாத்தியார் அடைக்கலசாமி ஓமக்குச்சி மாதிரி ஒல்லியா இருப்பார். ஸ்கூல்ல இங்க்லீஸ் தெரிஞ்ச ஒரே வாத்தியார் இவருதான். மத்த வாத்தியாரெல்லாம் இவர்கிட்டதான் இங்கிலீஸ்ல டவுட் கேப்பாங்க. 'எவனும் மொத மார்க் எடுக்க வேண்டாம். எல்லாரும் பாஸ் ஆனா போதும்'அப்படின்னு யதார்த்தத்தைப் பேசுவார். கையை திருப்பச்சொல்லி, விரலோட பின்பக்கத்துல அடிக்கிறது இவரோட ஸ்டைல். இவரும் இப்போது இல்லை.



மொத்த பல்லிக்கொடத்துக்கும் ஒரு காமெடியன்னு சொன்னா, அது ஏழாங்கிலாஸ் சார் சண்முகம்தான். இவருதான் துணை தலைமை ஆசிரியர். ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் இவரைக் 'குண்டு சார்'ன்னுதான் கூப்பிடும். பள்ளிக்கொடத்துக்கு வரும்போதே கரெக்டா அஞ்சு வறுகடலைப் பாக்கெட் வாங்கிட்டு வந்துடுவாரு. காலையிலேர்ந்து மத்தியான்ம் சாப்பாட்டு மணியடிக்கிற வரைக்கும் மூணு பீரியடு. மத்தியானம் ரெண்டு பீரியடு. இந்த அஞ்சு பீரியடுக்கும், ஒவ்வொரு கடலைப் பாக்கெட்டா காலி பண்றதுதான் அவர் சோலி.

வந்து உட்கார்ந்த உடனேயே, எவனையாவது(பெரும்பாலும் நான்) எழுப்பிவிட்டு, 'நாலாம் பாடத்துல, பத்தாவது வரியிலேர்ந்து படி' அப்படின்னு குத்துமதிப்பா சொல்லிட்டு கடலையைக் கொறிக்க ஆரம்பிச்சார்ன்னா, கிளாஸ் முடியுற மணி அடிக்கும்போது அவரோட கடலையும் முடிவுக்கு வந்திருக்கும். ஒருமுறை இவரோட பேக்குல இருந்த கடலைப் பாக்கெட்டை எடுத்து சுத்தமா திண்ணுட்டு, தோலை மட்டும் மறுபடியும் பொட்டலம் போட்டு, பையிலயே வச்சுட்டோம். பங்கு கெடைக்காத பயலுக போட்டுக்குடுத்துட்டான். அடி வெளுத்தார் பாருங்க..பிரிச்சு மேய்ஞ்சுட்டாரு. ஓய்வுக்குப் பிறகு வீட்டுல இருந்த இவரும் இப்போது இல்லை.

அடுத்ததா எட்டாம்கிளாஸ் வாத்தியாரு அப்பாக்கண்ணு. இவருதான் ஹெட்மாஸ்டர். ஒரு மண்ணும் பாடம் நடத்த மாட்டார். எப்பயாவது வந்து தமிழ் மட்டும் நடத்திட்டுப் போவார். யாருக்கும் இவரைப் பிடிக்காது. ஓய்வுக்குப் பிறகு இப்ப என்ன பண்றாருன்னு தெரியலை. இம்புட்டுதான் எங்க ஆழிவாய்க்கால் பள்ளிக்கொடத்தோட வாத்திமார் வரலாறு. அதுக்குப் பிறகு பக்கத்துல இருக்குற மேலஉளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குப் போயாச்சு. அங்க கொத்து, கொத்தா ஒரு பாடத்துக்கு ஒரு ஆளுன்னு நிறைய பேர் வருவாய்ங்க. ஆனாலும் எங்க ஊரு வாத்தியார் மாதிரி அவங்கல்லாம் மனசை வசீகரிக்கலை.

எங்கப் பள்ளிக்கொடத்துல இன்னொருத்தர் இருந்தாரு. சாமிக்கண்ணுன்னுப் பேசு.ப்யூன். இவரு பசங்களை திட்டும்போது, 'உங்க வீட்டுல கருவாட்டுக் கொழம்பு வைக்க..' அப்படிம்பாரு. இல்லைன்னா, 'உங்க வீட்டுல தங்கம் விளைய'ம்பாரு. வீட்டுல சோடா கம்பெனி வச்சிருந்தாரு. ஒரத்தநாட்டுலேர்ந்து கெளம்பும்போது சைக்கிள் கேரியர்ல, சோடாவை எடுத்துக்குவாரு. ஒரத்தநாட்டுலேர்ந்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்துக்கு, வர்ற வழியில இருக்குற கிராமங்களுக்கு உண்டான நியூஸ் பேப்பர்களையும் வாங்கி, வரும்போதே ஒவ்வொரு கடையிலயாப் பேப்பரையும், சோடாவையும் போட்டுகிட்டே வருவாரு. பள்ளிக்கொடம் விட்டுப்போகும்போது கலெக்ஷன் நடக்கும். அதுபோக, வயக்காட்டுல ஒரு கட்டு புல் அறுத்து கேரியர்ல வச்சுக் கொண்டுட்டுப் போயிடுவரு. இதுக்காகவே வரும்போது கருக்கருவா கொண்டு வந்துடுவாரு. புல்லு அவர் வீட்டுல வளர்க்குற ஆட்டுக்குட்டிக்கு. இப்படி ஒரு நாள்ல இவர் பார்க்குற வேலை ஆச்சரியமா இருக்கும். இப்ப என்ன பண்றாரோ தெரியலை.

இப்ப நான் படிச்ச ஸ்கூல்ல எனக்கு தெரிஞ்ச வாத்தியார்கள் யாரும் இல்லை. ஆனா, சத்துணவுக் கூடத்துல சமையல் வேலை செஞ்ச ரெண்டு ஆயாக்களும், மணியடிக்கிற அந்த தண்டவாள இரும்பு துண்டும், மத்தியானம் சத்துணவுப் போடும்போது சொல்லப்படுற, 'பகுத்துண்டு பள்ளியில் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'ங்குற திருக்குறளும், சோயா மாவோட வாசனைக் கலந்த அந்த சத்துணவு சாம்பாரும் தன் மாறாத குணங்களோட அப்படியே இருக்கு.

இந்த வாத்திமார் வரலாறு என்னோட முடிஞ்சுப் போகக்கூடாது. அதனால, லக்கிலுக்கையும், வரவணையானையும் இந்த ஆட்டைக்கு அழைக்குறேன். வாங்க மக்கா..வாங்க.

கருத்துகள்

பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
லக்கி போட்ட கமெண்டை பிளாக்கர் தின்றுவிட்டதால், இங்கு கோபி, பேஸ்ட் செய்கிறேன்.

லக்கிலுக் has left a new comment on your post "வாத்தியார்...":

மாட்டி உட்டுட்டீங்களே அண்ணாத்தே!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வரவணையான் செந்திலின் கமெண்டையும் பிளாக்கர் தின்றுவிட்டது. அதுவும் இங்கே..copy and past..

வரவனையான் has left a new comment on your post "வாத்தியார்...":

அய்யா ஆழியூரான், வாழ்க்கையில் நான் மறக்க விரும்பும் 'கருப்பு பக்கங்கள்' என்பது என் பள்ளி நாட்களே. கல்லூரி நினைவுகளை யாரேனும் சுகமாய் பகிர்ந்து கொண்டால் வயிறு எரியுற பார்ட்டி நான். இதை தவிர வேறு எந்த ஆட்டைக்கும் ஆயுத்தமாகவே உள்ளேன்.
இருந்தாலும் என் கின்டர் கார்டன் "மிஸ்" களை பற்றி இன்றே எழுதுகிறேன் . அழைப்பிற்கு நன்றி

பின்னூட்டமிட்டதோட உங்க ரெண்டு பேரோட சோலி முடியப்போறதில்லை. சீக்கிரமே உங்க வாத்தியார் வரலாறுகளை எழுதியாகனும்..
தமிழ்நதி இவ்வாறு கூறியுள்ளார்…
எங்கே ஆழியூரான் நான் போட்ட பின்னூட்டம்? புளொக்கர் தின்றுவிட்டதா அதையும்?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//எங்கே ஆழியூரான் நான் போட்ட பின்னூட்டம்? புளொக்கர் தின்றுவிட்டதா அதையும்? //

வாத்திமார்களை திட்டியதால், புளொக்கருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது போல..உங்கள் பின்னூட்டமும் எனக்கு வந்து சேரவில்லை. மெயிலிலும் இல்லை. சிரமம் பார்க்காமல் மறுபடியும் இடுங்களேன்..
கதிர் இவ்வாறு கூறியுள்ளார்…
:))

நல்ல ஞாபக சக்தி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்