இடுகைகள்

நவம்பர், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி எப்போது கம்யூனிஸ்ட் ஆனார்..?

ப னிப்படலம் போல மனதில் படிந்திருக்கும் மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருந்த திரைப்படம் 'இயற்கை' .அதன் இயக்குனர் ஜனநாதன் எடுத்திருக்கும் 'ஈ' படத்தை கடந்தவாரம் பார்த்தேன். உயிர் காக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு காசு பார்க்கும் இரக்கமற்ற வியாபாரம் பற்றியும்,உலகை ஆட்டிப்படைக்கும் 'பயோவார்' என்ற மறைமுக யுத்தத்தைப் பற்றியும் வெகுஜன ஊடகத்தில் முடிந்த அளவுக்கு சந்தைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.ஆனால் படத்தின் இறுதி காட்சியில்தான் கொஞ்சம் முரண்படுகிறார். வினோதமாக அமைக்கப்பட்ட ஒரு டவரின் உயரத்தில் உலக தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி புரட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி கம்யூனிசம் பேசும் பசுபதி, அதற்கு முந்தைய அல்லது பிந்தைய காட்சியில் காந்தியின் சத்தியசோதனைப் படிக்கிறார்.சத்தியசோதனை படித்துக்கொண்டே,'துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது' என்று மாவோயிசம் பேசுகிறார்.'நான் உங்களை மாதிரி படிச்சவன் கிடையாது..'என்று சொல்லும் ஹீரோ ஜுவாவிடம் 'மக்கள்கிட்ட போ..மக்களைப் படி..அதைவிட வேற பெரிய பாடம் எதுவும் த