இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

IPL: காசு, பணம், துட்டு, Money.. Money..

படம்
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி நாடே பேசுகிறது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 25 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்த ுள்ளது. ரன் எடுக்கும் வகையில் மோசமாக பந்து வீச ஒரு ஓவருக்கு 60 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கியிருக்கிறார்கள். மைதானத்தில் இருந்தபடி துண்டை இடுப்பில் சொருகுவது, டி-சர்ட்டை மேலே இழுத்துவிடுவது, கையில் ரிஸ்ட் பேண்ட்டை அணிந்துகொள்வது... என லட்சக் கணக்கான ரசிகர்களின் கண்கள் பார்த்திருக்கும்போதே ரகசிய சமிக்ஞைகளை கொடுத்திருக்கின்றனர். சிக்ஸ் அடித்தபோது தலையை கவிழ்ந்து அவர்கள் ஃபீல் பண்ணியதை நினைத்து ‘என்னமா ஃபீல் பண்ணான்டா.. ஙொய்யால..' என ஆதங்கப்படுவதைத் தவிர ரசிகர்களுக்கு இப்போது வேறு வாய்ப்புகள் இல்லை. இவர்களின் சிக்னல்களை வைத்து சூதாட்டக்காரர்கள் பெட் கட்டுவதற்கு ஏதுவாக மைதானத்தில் இருந்தபடி வாம்-அப் செய்வது போல நேரம் கடத்தியிருக்கிறார்கள். இந்த கருமம் எதுவும் புரியாமல் ‘லாஸ் ஆஃப் பே'-வில் லீவ் போட்டுவிட்டு டி.வி.யில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள், அவர்கள் அடித்த சிக

உழைப்புச் சுரண்டலின் உச்சம்!

Barathithambi/Facebook:  ஒரு தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்தேன். அருகில் நின்ற செக்யூரிட்டி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ‘‘சார், நான் ஆறு ஐநூறு வாங்குறேன் சார். ஆயிரத்து ஐநூறு சேர்த்துப்போட்டு எட்டு ரூவாயா கொடுங்க சார்’’ என்று ஏக்கமாக கேட்டது அவர் குரல். எதிர்முனை சொன்ன பதில் என்னவெனத் தெரியவில்லை. ‘‘சரிங்க சார், பார்த்து செய்யுங்க சார்’’ என்று சொல்லி செல்போனை துண்டித்துவிட்டு, வெறித்துப் பார்த்தபடி நகர்ந்தார ். எட்டாயிரம் அவருக்கு ‘எட்டு ரூபாய்’ என்னும் பெருந்தொகையாகத் தெரிகிறது. 1,500 ரூபாய்க்காக ஏங்கி கெஞ்ச வைக்கிறது. நேற்று சலூனில், ‘‘ராத்திரி 100 ரூவா கொடுத்தா காலையில பத்தலங்குறா... என்னதான் பண்றதுன்னுத் தெரியலை’’ என்று சலூன்காரரிடம் புலம்பினார் காத்திருந்த ஒருவர். நூறுக்கும், இருநூறுக்கும், ஆயிரத்துக்கும், ஐயாயிரத்துக்கும் அல்லாடும் பல லட்சம் மக்கள் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதார நெருக்கடி தாங்க முடியாத துன்பமாக சூழ்ந்திருக்கிறது. வீட்டு வாடகை கொடுக்கவும், சமைத்து உண்ணவுமே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. நினைத்ததை

நம்பிக்கை... அதானே எல்லாம்!

படம்
டி.வி.யை திறக்க முடியவில்லை. ‘பிரைஸ் டாக்கை காபி அடிச்சுட்டாங்க' என்று பிரபு அடித்தொண்டையில் கூவுகிறார். ‘காபி அடிச்சா என்ன? மக்களுக்கு நல்லது நடந்தா சரிதானே?' என்று ஏதோ சமூக சேவை செய்வது போலவே மாதவன் வந்து பதில ் சொல்கிறார். இன்னொரு பக்கம் வேட்டி விளம்பரங்கள் நம் டவுசரை கழற்றுகின்றன. ஜெயராமில் ஆரம்பித்து ஜெயம் ரவி வரையிலும் ஆள் ஆளுக்கு வேட்டியை கட்டிக்கொண்டு விறைப்பாக நடக்கிறார்கள். சமீப காலங்களாக தொலைகாட்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும் திரும்பத் திரும்ப வரும் நகைக்கடை மற்றும் வேட்டி விளம்பரங்களின் இம்சையை நிஜமாகவே தாங்க முடியவில்லை.  ‘தமிழன் எவனும் வேட்டி கட்டுறதே இல்லை' என்று தங்கர்பச்சான் கொந்தளிக்க... எந்தப் பக்கம் திரும்பினாலும் பேண்ட் போட்டத் தமிழர்களின் தலைகளாக தெரிய... வேட்டி விளம்பரங்கள் தாறுமாறாக வருவதன் தர்க்கம் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்காவது அரசியல் கூட்டங்களுக்குப் போனால் வேட்டிகளின் கூட்டம் காணலாம். அது கூட கட்சி கரை வேட்டிகள்தான். ஆனால் இவர்கள் வேட்டியை ஒரு நவநாகரீக உடையாக, வேட்டி அணிந்தால் மரியாதை கூடுவதாக விளம்பரப்படுத்துக

உணவுப் பாதுகாப்புச் சட்டம்: யாருக்கு ஆதாயம்?

படம்
‘ஏழ்மை என்பது ஒரு மனநிலை’ - அண்மையில் ‘இந்திய இளவரசர்’ ராகுல்காந்தி உதிர்த்த முத்து இது. அதாவது ஏழ்மை என்பது நடைமுறையில் இல்லையாம். மனதில் அப்படி நினைத்துக்கொள்வதால்தான் ஏழ்மையுடன் இருக்கிறார் களாம். சரி, நாளையில் இருந்து ‘நாம் எல்லோரும் பணக்காரர்கள்’ என்று நினைக்கத் தொடங்கினால், ஏழைகள் எல்லாம் அம்பானிகளாகிவிடுவார்களா?  இது ராகுலுடைய கருத்து மட்டுமல்ல... மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா உள்ளிட்ட இந்திய பொருளாதார மேதைகளின் கருத்தும் இதுதான். அவர்களும், ‘இந்த நாட்டில் ஏழைகளே இருக்கக்கூடாது’ என்றுதான் நினைக்கிறார்கள். அதற்காக திட்டங்களும் தீட்டுகின்றனர். எத்தகைய திட்டம் எனில், ‘ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்தான் ஏழைகள். 29 ரூபாய் சம்பாதித்தால் ஏழை அல்ல’ என்று அறிவித்து, ஆடி மாத அதிரடி தள்ளுபடி போல, ஏழைகளை ஒரே நாளில் குறைத்துவிடுகிறார்கள். இந்த நாட்டின் 100 கோடி ஏழைகளின் நெற்றியில் ‘இனி நீங்கள் ஏழைகள் இல்லை’ என்று எழுதி ஒட்டிவிட்டால் அவர்கள் ஏழைகள் இல்லை என்றாகிவிடுவார்களா? அதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. ‘உணவு பாதுகாப்பு மசோதா’ என

தாய்ப்பூனை; தகப்பன் பூனை!

படம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். பைகளை எடுத்துக்கொண்டு அறைக் கதவை சாத்தும்போது உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம். கட்டிலுக்குக் கீழே ஒரு பூனை குட்டிப் போட்டிருந்தது. கண் திறக்காத நான்கு பூனைக் குட்டிகள். ஒன்று வெள்ளை; மற்ற மூன்றும் அழகிய கறுப்பு. அடைகாத்து படுத்திருந்த தாய்ப்பூனை எட்டிப் பார்த்த என்னை கடும் கோபத்தோடு முறைத்தது. சில நாட்களாகவே இந்த பூனை எங்கள் வீட்டுக்குள் அடிக்கடி வருவதும், போவதுமாக இருந்ததன் காரணம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாகவே இந்த பூனை வளர்ப்பது, நாய் வளர்ப்பது இதில் எல்லாம் எனக்கு அனுபவமோ, ஆர்வமா இருந்தது இல்லை. மனைவிக்கும் அப்படியே. அதனால் இந்தப் பூனைக் குட்டிகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலுக்கு வேறு தாமதமாகிக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி தாய்ப்பூனை வந்து செல்வதற்கு வசதியாக வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டுச் சென்றோம். (ஊருக்குப் போகும்போது ஜன்னல் கதவுகளை இறுக்க தாழிடுவதுதான் வழக்கம். அப்படி செய்திருந்தால் அந்த குட்டிகளின் நிலை என்னவாகியிருக்கும்? அய்யோ.. ). ஊரில் பூனைக் குட்டிகளை நினைத்துப் பா

'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'

படம்
‘காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை? அங்கு என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை.  முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது... இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன. எதுதான் உண்மை? ஊடகங்களும், அரசும் சேர்ந்து காஷ்மீர் பற்றிய உண்மைகளை மறைப்பதோடு தங்களின் மேலாதிக்கத்துக்குத் தோதான பொய்களையும் கட்டி எழுப்புகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்லுபடியாகவில்லை. அங்கு மிகப்பெரிய மக்கள் யுத்தம் ஒன்று