இடுகைகள்

மே, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை: மிரள வைக்கும் வீட்டுவாட‌கை

படம்
சென்னை என்பது பணக்காரர்களுக்கான நகரமாக மாறி வெகு காலமாகிவிட்டது. அதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகச் சமீபத்தில் வாய்த்தது. தங்கியிருக்கும் மேன்ஷன் அறையிலிருந்து தப்பித்து மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு வீடு பார்க்கலாம் என முடிவு செய்து வீடு தேடத் தொடங்கினோம். சென்னையின் எழுதப்படாத விதிகளின்படி வாடகையைப்போல பத்து மடங்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்தபடியால் அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டுதான் வீடு பார்க்கும் படலமே ஆரம்பமானது. நாங்கள் இப்போது தங்கியிருக்கும் மேன்ஷன் அறைக்கு ஆளுக்கு 1,000 ரூபாய் வீதம் 3,000 ரூபாய் வாடகைத் தருகிறோம். இதனுடன் மேற்கொண்டும் ஆயிரம் ரூபாய் சேர்த்து 4,000 ரூபாய் வாடகைக்கு வீடு பிடிக்கலாம் என முடிவுக்கு வந்தபோது, 'இவ்வளவு பெரிய தொகையை(?) வாடகையாகக் கொடுக்கப்போகிறோம். அதனால் நமக்கு சௌகர்யமான ஏரியாவில், ஓரளவுக்கு வசதியான வீடாகப் பார்க்கலாம்' என்பது எங்களின் முன்முடிவாக இருந்தது. அது எத்தனை முட்டாள்தனமானது என்பது முதல் வீட்டிலேயே புரிந்துவிட்டது. சூளைமேட்டின் வளைந்து நெளிந்து செல்லும் சந்துகளில் ப