இடுகைகள்

மார்ச், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாத்திமார் வரலாறு....

படம்
ப ள்ளிக்கொடத்துல படிச்சதை நெனச்சுப் பார்க்குறது எல்லாருக்குமே சொகமான வெசயம்தான். அபிஅப்பா அவரு படிச்ச பழைய பள்ளிக்கொட வாத்திமார்களோட பேர்களையெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு பதிவு எழுதியிருக்காரு. அதைப்படிச்சதும் அவுத்துவிட்ட மாடு கணக்கா என் புத்தியும் எங்கூருக்கு ஓடிப்போச்சு. தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை போற வழியில மேலஉளூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்குன எறங்கி மேற்கப் பாத்து மூணு கிலோமீட்டர் நடந்தா ஆழிவாய்க்கால்னு ஒரு ஊரு வரும். அதுதான் எங்க ஊரு. ஊருக்குள்ள உப்புக்கொளத்தான் கரையில தெக்குப்பார்த்தாப்ல இருக்குது எங்க பள்ளிக்கொடம். எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கு. மொத்தம் மூணு கட்டடம். அதுக்குள்ளாறதான் எட்டு கிளாஸ் பிள்ளைகளும் உக்காந்திக்கணும். ஏ,பி,சி,டி..ன்னு செக்ஷன் பிரிக்கிறது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரு வர்றது.. இந்த சோலியேக் கெடையாது. ஒரு கிளாஸ்தான்..ஒரே வாத்தியாருதான். மொதக்கிளாஸ் படிக்கும்போது ஆரம்பத்துல ஒரு ஆம்பளை வாத்தியார்தான் வந்தாரு. அப்புறமா கொஞ்ச நாள் செண்டு, ஜெயசித்ரா ன்னு ஒரத்தநாட்டுலேர்ந்து ஒரு புது டீச்சர் வந்தாங்க. அவங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கன்னங்க

இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா...?

'இ ந்திய சாதிய சமூகத்தில், தலித்துகள் அடுக்கப்பட்ட மூட்டையில் கடைசி மூட்டையாக இருக்கிறார்கள்' என்று அம்பேத்கர் சொல்லி ஒரு நூற்றாண்டு காலம் முடிந்துவிட்டது. நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அந்த நிலையிலிருந்து நாடு இன்னும் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லையோ என்று சந்தேகம் வருகிறது. அதுவும் கடைசி மூட்டையான தலித்துகள் மீது மேலும், மேலும் சுமைகள் ஏற்றப்படுகின்றன என்பதுதான் வேதனை. இடப்பங்கீட்டின் அடிப்படையில் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டதாக ஒரு பம்மாத்து நாடகம் இங்கு வெகு காலமாக நடத்தப்படுகிறது. அந்த இடப்பங்கீடு, நடைமுறையில் ஆதிக்கசாதிகளிடம் சிக்கி எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறது என்பதை, பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும், நாட்டார்மங்களத்திலும் பார்த்தோம். அங்கு உழைக்கும் தலித் மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்கும் அடிப்படை காரணங்களை கலைவதை விட்டுவிட்டு, அரசும் தன் பங்குக்கு ஒரு நாடகத்தை நடத்தியது. அண்மையில், மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, மூன்று தலித்துகளை பஞ்சாயத்து தலைவர்களாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக தேர்தல் நடக்காத ஊரில் தேர்தல் நடத்த